Begin typing your search above and press return to search.
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பவர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அந்த பணத்தை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.