/* */

திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்

திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.

HIGHLIGHTS

திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்
X

திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 1000 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பொது வழியையும் அடைத்துள்ளனர்.


கொரோனா பரவல் காரணமாக அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நிலையில் திருப்பத்தூரில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை திறக்க கூடாது என்று எச்சரித்தும் தடையை மீறி கடையை திறந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட துணி கடை, பாத்திரக்கடை, பர்னிச்சர் கடை டிவி ஷோரூம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சார் ஆட்சியர் வந்தனா கர்க் சீல் வைத்தார். இதனை அறிந்து அவசர அவசரமாக மூடிய கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Updated On: 5 May 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?