/* */

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர் அதிர்ச்சி

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை அருகே  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; குடும்பத்தினர் அதிர்ச்சி
X

பைல் படம்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் ஆப்பிள் கொள்முதல் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா வயது 35. இவர் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தான் வெளியூர் செல்வதற்காக, மம்தாவை ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள வக்கணம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மம்தாவின் தந்தை அறையை திறந்துள்ளார். அப்போது அறையில் மம்தா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மம்தாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 22 Aug 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!