/* */

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பொறுப்பேற்பு

நெல்லை அரசு மருத்துவமனை புதிய டீனாக டாக்டர் ரேவதி பொறுப்பேற்று கொண்டார்.

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பொறுப்பேற்பு
X

நெல்லை அரசு மருத்துவமனை புதிய டீன் டாக்டர் ரேவதி .

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருது நகர் உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை திகழ்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்படுகிறது.

நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் டீனாக பணியாற்றி வந்த டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து துணை முதல்வரான டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வராக பணிகளை கவனித்து வருகிறார்.

இந்நி லையில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் ஆக பணியாற்றிய டாக்டர் ரேவதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் டீனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர். பின்னர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணியாற்றினார். அங்கிருந்து சிவகங்கைக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது நெல்லைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 May 2023 7:38 AM GMT

Related News