/* */

நெல்லையில் மரங்கள் கணக்கெடுக்கும் பணி, தொடங்கி வைத்த கலெக்டர் விஷ்ணு

நெல்லை மாவட்டத்தில் மரங்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் மரங்கள் கணக்கெடுக்கும் பணி, தொடங்கி வைத்த கலெக்டர் விஷ்ணு
X

நெல்லை மாவட்டத்தில் மரங்கள் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் காணப்படும் மரங்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை 2ஆம் தேதி அரசின் வனம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம் அரசாணை பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து மாநில அளவில் ஒரு பசுமை குழுவும், மாவட்ட அளவில் ஒரு பசுமை குழுவும் அறிவுறுத்தப்பட்டு பசுமை குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த குழுக்கள் மக்களைப் பாதுகாப்பது, மரங்கள் வெட்டப்படுவது, முறைப்படுத்துவது, தேவையான இடங்களில் மரங்களை நடுவதற்கு ஆவண செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மணிமுத்தாறில் செயல்படும் அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் , உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா நிகழ்வு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்துகொண்டு மரங்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மாவட்டத்தில் பசுமை குழு ஒன்று அரசு உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை நீர்வளம் என்று தொடங்கப்பட்டு, நீர் நிலைகளை டிஜிடல் மேப் செய்வது, தாமிரபரணி ஆற்றின் தடங்களை கண்டறிவது நடந்து வருகிறது,

இதன் தொடர் முயற்சியாக மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 100 ஆண்டுகள் பழமையான 153 கோவில்களில் உள்ள மரங்கள் கணக்கெடுப்கப்படுகிறது.

இதனை அடுத்து பொது இடங்களில் உள்ள மரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. தற்போது இந்த பணியில் 30 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் மரங்களின் வாழ்வியல், கலச்சாரம், மரத்தின் வயது, அதன் இனம், மரத்தில் வாழும் பல் உயிரினங்கள் ஆகியவையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், அறிவியல் மைய அதிகாரி முத்துகுமார், அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 4:30 PM GMT

Related News