/* */

சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றது 3000 கி.லிட்டர் ஆக்சிஜன்

சென்னையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 3000 கி.லிட்டர் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது

HIGHLIGHTS

சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றது 3000 கி.லிட்டர் ஆக்சிஜன்
X
சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற ஆக்சிஜன்

நெல்லை மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 600 க்கும் மேற்பட்டோர் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அரசு சிகிச்சை மையமான பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளும் கொரனா சிகிச்சைக்கு வருவதால் கடந்த சில வாரங்களாக கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் சென்னையிலிருந்து இன்று 3000 கிலோ லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டேங்கர் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட 3000 கி.லி ஆக்சிஜன் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் நிரப்பப்பட்டது.

ஏற்கனவே நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு கட்டங்களாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கபட்டது. இந்த சூழலில் தற்போது முதன்முறையாக சென்னையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை அரசு மருத்துமனையில் தற்போது 800க்கும் மேற்பட்ட படுக்கைகளில் நோயாளிக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கி வருவதாகவும் அதனால் தற்போது நெல்லை அரசு மருத்துமனை உள்பட மாவட்டம் முழுவதும் கொரனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 May 2021 12:37 PM GMT

Related News