Begin typing your search above and press return to search.
திருவாரூரில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் திட்டத்தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், 2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவாரத்தையை உடனடியாக தொடங்க வேண்டும், வாரிய செயலாளருக்கு தலைமை பொறியாளர் பொறுப்பு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதோடு பகுதிநேர சுகாதரா பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.
அடிப்படை பதவிகளுக்கான காலியிடங்களை மின்வாரியமே தேர்வு செய்து நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயல்தலைவர் ராஜகோபால்,கோட்ட செயலாளர் ராஜாராமன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.