Begin typing your search above and press return to search.
திருவாரூரில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் பலி
திருவாரூரில், மின்கம்பி மீது பட்டு, தூக்கி வீசப்பட்டு 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
HIGHLIGHTS
திருவாரூர் நேதாஜி சாலையில் வசிப்பவர், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ஹரிஷ்சிங். இவரது மகன் பிரவீன் சிங் (13), திருவாரூர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டின் மாடியில், சிறுவன் விளையாடிக் கொண்டிபோது எதிர்பாராதவிதமாக, வீட்டின் வெளியே சென்ற மின்கம்பி மீது அவரது கை பட்டது. இதில், மின்சாரம் தாக்கியதில் சாலையில் சிறுவன் உடல் தூக்கிவீசப்பட்டது. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பிரவீன் சிங் மரணம் அடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.