திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு
திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூர்வாரும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாருவது, தடுப்பணைகளில் உள்ள கதவுகள் சீர்மைப்பு பணிகள் ஆகியவற்றிற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லிக்குடி பகுதியில் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் 8 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது.
மேலும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.71 கோடி மதிப்பில் 549 பணிகளில் 4294 கிலோ மீட்டர் தூரவாரப்படவுள்ளதாகவும், இதில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.12.08 கோடி மதிப்பில், 115 பணிகளில் 1200 கிலோ மீட்டர் தூரவாரப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.