Begin typing your search above and press return to search.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
வெள்ளக்குடி கிராம மக்கள், தங்கள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாகக்கூறி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களை சிலிகேட் கம்பெனிகள் விலைக்கு வாங்கியது. கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய நிறுவனம், தற்போது விவசாய நிலங்களை அழித்ததுடன், அப்பகுதி மக்களை சுமைதூக்க மட்டும் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், சிலிகேட் கம்பெனிகள் தங்களுக்கு எதிராக செயல்படும் கிராம மக்களை மிரட்டி வருவதாகவும், கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், அரசு அதிகாரிகள் இதற்கு துணை போவதாகவும், இதனை தடுத்து வேலைவாய்ப்பு வழங்கி பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் போராட்டத்தில் தெரிவித்தனர்.