திருவாரூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்
திருவாரூரில், பராமரிப்பு பணிக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரத்தை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, திருவாரூரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (இயக்குதலும் பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவாரூர் 110/33/11 கி.வோ.துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாளை 18-ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி , கூடூர், முகந்தனூர், திருப்பயத்தங்குடி, மற்றும் மாவூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்படும்.
அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி காலனி, சிதம்பரநகர், பிலாவடி மூளை, ஆந்தகுடி , அலிவலம் , புலிவலம், தப்பளாம்புலியூர் , புதுப்பத்தூர், நீலப்பாடி, மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.