திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராம ஊராட்சி சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும், அனைவரும் ஜாதி ,மத பாகுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ திருவிழாவை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடியை ஆட்சியர் காயத்ரி அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், ஒன்றிய பெருந்தலைவர் தேவா, ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து , சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஹேமச்சந்த் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.