Begin typing your search above and press return to search.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி நாளையதினம் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை என, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்தில் 7 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளன.
இதற்காக, 39 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த வாக்கு எண்ணிக்கை காக மாவட்டம் முழுவதும் 586 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.