/* */

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன், அஞ்சல் துறையின் ஜிடிஎஸ் ஊழியர்களை மீது கடுமையான திட்டங்களை செயல்படுத்தி வரும் அஞ்சல் துறையை கண்டித்து அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஊழியர்களை விடுப்பு எடுக்க விடாமல் பணி செய்ய வற்புறுத்துவது, டார்கெட் - டார்ச்சர் என ஊழியர்களை வஞ்சிப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தனராஜ், மாநில தணிக்கையாளர் சசிகுமார், முன்னாள் செயலர் ராமலிங்கம் , செயலர் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 6:18 AM GMT

Related News