Begin typing your search above and press return to search.
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டத்தில் 2022-ல் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2022 முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04366-220112 என்ற எண்ணில் தெரிவித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.