நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருவாரூர் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வை மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வினியோகத்தை முன்னாள் உணவுத் துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளருமான இரா. காமராஜ் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமான அ.தி.மு.க.வினர் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்று செல்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ..என்.ஆர்.பன்னீர்செல்வம், நகர கழக செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.கே.யூ. மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.