Begin typing your search above and press return to search.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்
ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், 2020 - 21 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகையை விடுவித்தும் வழங்கப்படாமல் உள்ள கிராமங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்,தொடர் மழையால் வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 10,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் யோகநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
சாலைமறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.