/* */

களப்பாலில் தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம் திறப்பு

தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

களப்பாலில் தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம்  திறப்பு
X

களப்பால் கிராமத்தில் புதிய நூலகத்தை ஏ.கேஎஸ். விஜயன் திறந்து வைத்தார்.

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு அறக்கட்டளையினர் புதிய நூலகம் ஒன்றை இன்று திறந்துவைத்தனர்.

கிராமத்தின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்ற அண்ணல் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தி, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்த தலைவர்களில் ஒருவரான களப்பால் குப்புசாமி தன்வாழ்நாளில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டவர். அவரது நினைவை போற்றும் வகையிலும், அவர்பிறந்து வளர்ந்த திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் களப்பால் பகுதியில் பஞ்சாயத்துராஜ் தினமான இன்று தியாகி குப்புசாமியின் அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம் ஒன்றை அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்துவைத்தார்.

இதனை தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு தியாகி குப்புசாமி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டது அதனைதொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Updated On: 24 April 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!