/* */

பள்ளி வளாகத்தில் விஷப் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவியை விஷ பாம்பு கடித்ததால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பள்ளி வளாகத்தில் விஷப் பாம்பு கடித்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை
X

பாம்பு கடித்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபேந்திரன். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளையமகள் நவரஞ்சினி அருகில் உள்ள சவளக்காரன் அரசினர் மேல்நிலைப்பள்ளியல் 11ம்வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கலையில் பள்ளிக்கு வந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது எதிர்பாராமல் விஷபாம்பு ஒன்று கடித்து விட்டது. மாணவியின் அழுகை சத்தம் கேட்டு ஆசிரியர்கள் கழிவறை அருகே சென்று பார்த்தபோது மாணவி நவரஞ்சினி தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறினார்.

பின்னர் மாணவியை மீட்டு ஆசிரியர்கள் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

Updated On: 17 Feb 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!