/* */

மன்னார்குடி அருகே ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் கோவில் மகாகும்பாபிஷேகம்

மன்னார்குடி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் ஆலய மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மன்னார்குடி அருகே ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் கோவில் மகாகும்பாபிஷேகம்
X

மன்னார்குடி அருகே ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த 17 செருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மை சிறப்புமிக்க 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நான்கு கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக் கொண்டு நடைபெற்றது.

இதில் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், அக்னிஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதன் நிறைவாக 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து கோபுர விமான கலசங்களை அடைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

இதனை தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். இப்பகுதி மக்களின் எல்லை தெய்வமாகவும், வேண்டுதலை நிறைவேற்றும் பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் குடமுழக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் மற்றும் ஸ்ரீஆதியப்பன், ஸ்ரீதூண்டிக்காரன், ஸ்ரீமுன்னோடியான் முதலான ஆலயத்தின் பரிகார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது.

Updated On: 14 Feb 2022 12:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!