/* */

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயற்சித்தனர்.

HIGHLIGHTS

நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி
X

நீடாமங்கலம் ரயில் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் தொடர்ந்து 300 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ,விவசாயிகளுக்கு எதிராக மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தை உடனே திரும்பெற வலியுறுத்தி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதன் போில் , திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை கட்சிகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 250க்கும் மேற்பட்டோர் எர்ணாகுளம் அதிவிரைவு ரயிலை மறிக்க முயற்சித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக அவர்கள் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது பேசிய விவசாய அமைப்பினர் மக்கள் விரோதபோக்கை கையாலும் பிரதமர் மோடி உடனே விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள மூன்றுவேளாண் சட்டத்தையும் திரும்ப பெறவில்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக மத்திய அரசை எச்சாித்தனர்.

Updated On: 27 Sep 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!