/* */

இன்று நான் என்ன செய்தேன்? அசத்தும் கம்பம் கவுன்சிலர்

கம்பம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சாதிக் தான் தினமும் செய்யும் பணிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாராட்டுகளை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

இன்று நான் என்ன செய்தேன்? அசத்தும் கம்பம் கவுன்சிலர்
X

கம்பம் கவுன்சிலர் சாதிக் வெளியிட்ட படம்.

தேனி மாவட்டத்தில் நகராட்சிகளில் 177 கவுன்சிலர்கள், பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் கம்பம் நகராட்சி 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாதிக் சற்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறார். பதவியேற்ற முதல்நாளே தனது வார்டில் உள்ள பொதுக்கழிப்பறையை தானே சுத்தம் செய்தார். அந்த கழிப்பறை சுத்தம் செய்வதற்கு முன்னர் எப்படி இருந்தது. தற்போது சுத்தம் செய்த பின்னர் எப்படி உள்ளது என்ற விவரங்களை வெளியிட்டார்.

இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து தினமும் தான் செய்யும் பணிகளை சமூக வலைதளத்தில் படங்களுடன் வெளியிட்டு மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். தற்போது லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோவில் 11வது வார்டு பகுதியில் ரோட்டோரம் கிடந்த குப்பைகளை (குப்பைகளுடன் ஒரு படம், அகற்றிய பின்னர் ஒரு படம்) அகற்றிய விவரங்களை படங்களுடன் வெளியிட்டு இருந்தார்.

இவர் சிறப்பாக வேலை செய்கிறார் என்பது வார்டு மக்களுக்கு தெரியும். இருப்பினும் இப்படி வெளியிடுவதன் மூலம் பிற வார்டு கவுன்சிலர்களும் இதேபோல் செயல்பட ஒரு உந்துதலாக அமையும் என மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 28 March 2022 2:52 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!