Begin typing your search above and press return to search.
தேனி மாவட்டம்: ரத்ததானம் வழங்கிய ஐயப்பன் - முருகன் பக்தர்கள்
ஆண்டிபட்டி அருகே வருஷநாடு பவளம்நகரில் ரத்ததானம் வழங்கிய பக்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
HIGHLIGHTS
வருஷநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பவளம் நகரில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியும், கடமலைக்குண்டு விவேகானந்தா மருத்துவமனையும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.
இதில், வருஷநாடு ஐயப்பசேவா சங்கம், பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் அனுமந்தன், விவேகானந்தா மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் கலையரசன், மருத்துவமனை தலைமை நிர்வாகி தலைவணங்காமுடி உட்பட பலர் கலந்து கொண்டனர். ரத்ததானம் வழங்கிய பக்தர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.