/* */

முப்படை தளபதியின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத்தூண்

முப்படையின் முன்னாள் தளபதி பிபின்ராவத் மற்றும் 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இடத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

முப்படை தளபதியின் நினைவாக  அமைக்கப்படும் நினைவுத்தூண்
X

பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூண் திறக்கப்படுகிறது

பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபிப் ராவத் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Updated On: 22 Nov 2023 6:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!