/* */

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
X

தேனி கலெக்டர் அலுவலகத்தில்,  குடும்ப பிரச்னை காரணமாக,  குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற மாரியம்மாள்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க வருபவர்களில் சிலர், உணர்ச்சிவசப்பட்டோ, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவோ, அல்லது விரக்தியிலோ, தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். எனவே, போலீசார் மிகுந்த விழிப்புடன் இருந்து, இது போன்ற நபர்களை பாதுகாக்க வேண்டி உள்ளது.

இன்று, ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன், 48 என்பவர் நிலப்பிரச்னை காரணமாக தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆண்டிபட்டி அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள், 26 தனது குழந்தையுடன் வந்து குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க வலியறுத்தி தீக்குளிக்க முயன்றார். மதுரையை சேர்ந்த மூதாட்டி ராமுத்தாய், 80 தனது நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமித்து விட்டனர் எனக்கூறி, அவரும் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். மூவரையும் காப்பாற்றிய போலீசார், சம்மந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு, அவர்களது புகார் மனுவை அனுப்பி வைத்து விசாரிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Updated On: 22 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!