/* */

மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

உத்தமபாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்துதப்பி ஓடிய இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மூதாட்டியிடம் நகையை பறித்த  வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்த 67 வயதுடைய மூதாட்டியான சாந்தா என்பவரிடம் குளிர்பானம் வாங்குவது போல நடித்து ஏமாற்றி சாந்தா அணிந்திருந்த 36 கிராம் மதிப்புள்ள 41/2 பவுன் தங்க நகையை இரண்டு நபர்கள் பறித்துக்கொண்டு ஓடி விட்டார்கள்.

இது தொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து சென்னையைச் சேர்ந்த லோகநாதன் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சென்னை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல இடங்களில் திருட்டு வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு குற்றவாளிகளையும் உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 24 July 2022 1:01 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?