/* */

சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத ரேஷன் கடை

முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.

HIGHLIGHTS

சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு  திறக்கப்படாத ரேஷன் கடை
X

கோப்பு படம் 

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே அப்பிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் முத்துக்கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் இரண்டு கி.மீ., துாரம் நடந்து அப்பிபட்டி கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் எந்த தேதியில் என்ன பொருட்கள் போடுகின்றனர் என்ற விவரம் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடை திறந்திருக்கும் நேரத்திற்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பிணிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்க ரேஷன் கடையினை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 31 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...