/* */

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு தமிழக விவசாயிகளுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

HIGHLIGHTS

கேரளாவிற்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: தமிழக விவசாயிகள் நிம்மதி
X

உச்சநீதி மன்றம் ( பைல் படம்)

முல்லை பெரியாறு அணையில் தொட்டதிற்கெல்லாம் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போட்டு தமிழகத்திற்கு தொல்லை கொடுத்த கேரளாவிற்கு நேற்று சுப்ரீம் கோர்ட் பலத்த கொட்டு வைத்தது தமிழக விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு தேவையில்லாமல் நெருக்கடி கொடுப்பது கேரளாவிற்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் கேரளாவில் அரசு தொடர்கிறதோ இல்லையோ, சமூக ஆர்வலர்கள் எனக்கூறிக்கொண்டு ஒவ்வொருவராக வழக்கு தொடர்ந்தனர்.

நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோரது அமர்வின் முன்பு, 'முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'இது போன்ற சின்ன சின்ன நிர்வாக பிரச்னைகளில் எல்லாம் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது. சுப்ரீம்கோர்ட் நியமித்துள்ள கண்காணிப்பு குழுவை அணுகுங்கள். கண்காணிப்புக்குழு இந்த விஷயத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கும். ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் வழக்கு தொடர்வதை நிறுத்துங்கள் என கண்டித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தமிழக விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு எதிரான பிரசாரம் செய்யும் சேவ் கேரளா அமைப்பு, வல்லக்கடவு வரை வந்து விட்டது. இந்த வாரம் குமுளிக்கும் வர உள்ளது. இந்நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 3:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!