Begin typing your search above and press return to search.
போடி அருகே கடன் தொல்லையால் கான்ட்ராக்டர் தற்கொலை
கடன் தொல்லையால், போடியில் கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டம், போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 28. கட்டட கான்ட்ராக்டரான இவர், அதிகளவில் கடன் வாங்கியிருந்தார். தொழிலிலும் முடக்கம் ஏற்பட்டது. வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன், விஷம் குடித்து இறந்தார். இவரது மனைவி தங்கபவித்ரா கொடுத்த புகாரின் பெரில், போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.