தஞ்சையில் இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
தஞ்சையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தஞ்சை மானம்புச்சாவடி ஆடக்காரத் தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகள் கலைவாணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய சக தோழியிடம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனமுடைந்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலைவாணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் சாலைமறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.