வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்
பூதலூர் அருகே வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேருக்கு காயம். விபத்து குறித்து போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு, பூதலூர் வழியாக ஆஸ்பெட்டாஸ் சீட் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது, பூதலூர் வெண்ணாற்று பாலத்தில் சென்ற போது, எதிரில் வந்த டிராக்டர் லாரி மீது மோதியது.
மோதிய ட்ராக்டர் சென்றுவிட்ட நிலையில், நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையை உடைத்துக்கொண்டு ஆற்றில் தலைகுப்புற லாரி கவிழ்ந்தது. இதில் அசோகன், கருப்புசாமி, முகைதீன், நிஷா அகமதுல்லா, சக்தி ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.
கார்த்தி என்பவர் லாரியின் அடியே மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
காயமடைந்த 5 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பூதலூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை.