/* */

பாபநாசம் பேரூராட்சியில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பாபநாசம் பேரூராட்சியில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

பாபநாசம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி காப்பன் தெருவில் பயனாளிகளுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

விழாவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு 300 குடும்பங்களுக்கு புடவை, வேட்டி, சட்டை, காலண்டர், மஞ்சப்பை, ரூ.1000 ரொக்க பணம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் தமிழ்வாணன், நிர்வாகி சுரேஷ், வார்டு பிரதிநிதிகள் பிரபு, ராஜா, முருகேசன், ஜெயக்குமார், முத்துமதி, சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jan 2022 1:05 PM GMT

Related News