/* */

சோளிங்கர் நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சோளிங்கர் நரசிம்மர் கோயிலில் ரோப்கார் சேவையை தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார்.

HIGHLIGHTS

சோளிங்கர் நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்த  முதல்வர் ஸ்டாலின்
X

சோளிங்கர் கோவில் ரோப் கார் 

சோளிங்கர் பகுதியில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார் 1,306 படிக்கட்டுகள் மலை படியேறி பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வந்தனர். இதன்காரணமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்

பெரும்பான்மையான பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதன் காரணமாக அந்தக் கோயில் அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ரோப்கார் அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுக்கு மேலாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசால் ரோப்கார் அமைக்கும் பணியானது ரூ.9.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வந்தது. மேலும் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிக்காக கட்டுமான பணிகளும் நடைபெற்ற வந்த நிலையில் இரண்டு பணிகளும் தற்போது முடிவடைந்தது.

மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் வாயிலாக மலைக் கோயிலுக்குச் செல்ல 3 முறை ரோப்கார் சோதனை ஓட்டத்திற்குப் பின்பு, இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்துத் துவக்கி வைத்ததோடு ரோப்காரில் பக்தர்களோடு இணைந்து பயணித்து லட்சுமி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்தார்.

ரோப்கார் சேவை துவங்கப்பட்டதைத் தொடர்ந்து சோளிங்கர் பகுதியில் உள்ள பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 8 March 2024 8:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  4. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  5. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  6. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  8. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  9. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...