இராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் திடீர் இடமாற்றம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிவரும் 6 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்,நெமிலி, வாலாஜாப்பேட்டை, சோளிங்கர்,ஆற்காடு, மற்றும் கலவை ஆகிய வட்டங்களில் பணியாற்றிவரும் வட்டாட்சியர்களில்,
ஆனந்தன் வாலாஜாப்பேட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) பொறுப்பு வட்டாட்சியராகவும்,
வாலாஜாப்பேட்டை பொறுப்பு வட்டாட்சியராக இருந்த ஜெயப்பிரகாஷ், கலவை தனி வட்டாட்சியர் (ச.பா.தி)ஆகவும்,
ஆற்காடு பொறுப்பு வட்டாட்சியர் காமாட்சி , வாலாஜாப்பேட்டை தனி வட்டாட்சியர்(ச.பா.தி) ஆகவும்,
கலவை தனி வட்டாட்சியர் (சபாதி) கோபாலகிருஷ்ணன், ஆற்காடுபொறுப்பு வட்டாட்சியராகவும்,
இராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் ரமேஷுக்கு பதிலாக குமரவேலும், அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் குமரவேலுக்குப் பதிலாக ரமேஷ் ஆகிய 6,வட்டாட்சியர்களை திடீர் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார் .