ராணிப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராணிப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சத்திரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன்கள் தங்க செல்வன், சேட்டு. இவர்கள் சத்திரம்புதூரிலிருந்து சிலோன் காலனிக்கு செல்லும் சாலையில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
தங்க செல்வன், சேட்டு ஆகியோர் குடும்பத்துடன் வயலுக்கு சென்று விட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்றபோது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்தவர்கள், வீட்டினுள் பார்த்த போது 4 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.17 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் புகுந்த திருடர்கள் தடயங்களை மறைக்க பீரோவில் இருந்து பின் வாசல் வரை மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
இது குறித்து சேட்டு சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்