Begin typing your search above and press return to search.
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள சத்திரம்புதூரைச் சேர்ந்த கணபதி. விவசாயியான இவர், இன்று காலை கணபதி தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்று மின் மோட்டாரின் ஸ்விட்சை அழுத்தினார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்த தகவலறிந்த சிப்காட் போலிஸ் வழக்கு பதிந்து கணபதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது