/* */

இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆய்வு செய்தார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6நகராட்சிகள் 8பேருட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் அரக்கோணம் நகராட்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக அருகிலுள்ள இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல மற்ற5 நகராட்சிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப் இயந்திரங்கள் எண்ணிக்கைக்காக வாலாஜா அறிஞர் அண்ணா அரசுமகளிர் கலைக்கல்லூரியிலும் வைக்கப்பட்டும்,

பேரூராட்சிகளில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணிக்கைக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவற்றை மூன்றடுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு வளையங்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்புப்பணிகளை வேலூர் சரக காவல்துறைதுணைத் தலைவர் ஆனிவிஜயா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

ஆய்வில் அவர் பாதுகாப்பில் கடைபிடிக்கவேண்டியவிதிகள் ,கண்காணிப்பு பணிவிபரங்கள் கேமராப் பதிவுகள்கண்காணிப்பு,வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்.ஆகியவற்றை கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. தீபாசத்தியன் உடனிருந்தார்.

Updated On: 21 Feb 2022 5:27 AM GMT

Related News