/* */

ஒமிக்ரான் வைரஸ் அபாயம்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை

HIGHLIGHTS

ஒமிக்ரான் வைரஸ் அபாயம்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
X

கொரோனாவை தவிர்க்க மாஸ்க் அணிவது கட்டாயம்.

உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவும் அபாயமான சூழல் நிலவி வுருகிறது. கடந்த 2019, ஜனவரியிலிருந்து உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தொடங்கியது. தொற்றினைத் தடுக்க மத்திய அரசு அதே ஆண்டு மார்ச் 24 முதல் நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அமுல்படுத்தியது. பின்னர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதன் மூலம் நோய்ப் பரவல் பெருமளவில் குறைந்து வருகிறது.

இந்நிலையில், "ஒமிக்ரான் வைரஸ்" என்ற புதியவடிவில் இந்தியாவிற்குள் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக முக்கவசம் அணியாமல் வெளியே, பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து் ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ளப் பொது இடங்களில் முகக்கவசமின்றி இருப்பவர்களைக் கண்டு அபராதம் விதிக்கும்படி வருவாய்த்துறை சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 5 Dec 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!