இராணிப்பேட்டை பாரதி சேவா சங்கம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்
அரசு மற்றும்தனியார் மருத்துவ மனைகளுக்கு இராணிப்பேட்டை மாவட்ட பாரதி சேவாசங்கம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கியது
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருவதால் பற்றாக்குறையைப் போக்க மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உபகரணங்கள் மற்றும் செறிவூட்டிகள் போன்றவற்றை இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதி சேவாசங்கத்தினர். இணைந்து வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, இராணிப்பேட்டை திருமலை அறக்கட்டளை மருத்துவமனைமற்றும் சிப்காட் ஜி.கே மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆற்காடு நாகராஜன் தலைமை வகித்தார். பாரதி சேவாசங்கம் கிருஷ்ணமூர்த்தி, பொன்கதிரவன், முரளிகிருஷ்ணன், மற்றும் வி.எச்பி அனந்தலைரவி ஆகியோர் உடனிருந்தனர் .மேலும் கொரோனா ஊரடங்கில் மாவட்டத்தில் வாழ்வாதாரமிழந்து வறுமையில் உள்ள 30 குடும்பத்திற்கு ரூபாய் 1000 மதிப்புள்ள அரிசி மளிகைப் பொருட்களை வழங்கினர்