அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை தகவல்
வாலாஜாப்பேட்டையடுத்த அனந்தலை ஏரிக்கரை சாலை விரைவில் சரிசெய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை யிலிருந்து அனந்தலை ஏரிக்கரை வழியாக செல்லும் வள்ளுவம்பாக்கம், பணப்பாக்கம் சாலை உள்ளது. இந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்துவருகிறது. சாலைவழியாக சுமார் 25க்கும. மேற்பட்ட கிராமமக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் அனந்தலை ஏரிக்கரை சாலை சுமார. 100அடி நீளத்திற்கு சரிந்தது. இதனால், இந்த சாலை வழியாக செல்ல மக்கள் அச்சமடைந்தனர். உடனே, இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகளை வைத்துச்சென்றனர். இருப்பினும் பீதியுடனே சாலையில் சென்று வரும் பொதுமக்கள் சரிவடைந்துள்ள சாலையை சீரமைத்திடக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.
சாலையில் சரிவு ஏற்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலான நிலையில், இது குறித்து நெடுச்சாலை அதிகாரி கூறும்போது, மண்ணின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வுசெயது சுமார் 16அடி உயரம் மற்றும் 125அடி நீளத்திற்கு கம்பி வலைகளை அமைத்து முற்றிலும் கான்கிரீட்டாலான தடுப்புச் சுவரை அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவுகளைத் தயாரித்து அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சரிந்துள்ள சாலையை சீரமைக்க அரசு தற்போதய நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் ஒப்பந்தங்கள் கோரப்படும் , ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டதும் பணிகள் துவங்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்துமே 3மாதங்களுக்குள் நடந்து கட்டுமானப் பணிகளை விரைவில் துவங்கப்பட உள்ளது என்று நெடுஞ்சாலைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது