/* */

நரசிங்கபுரத்தில் சாலையோர பனைமரங்களை வெட்டிய 3 பேர்கைது.

இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த நரசிங்கபுரத்தில் சாலையோரமிருந்த பனைமரங்களை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நரசிங்கபுரத்தில் சாலையோர பனைமரங்களை வெட்டிய 3 பேர்கைது.
X

நரசிங்கபுரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட பனைமரங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த நரசிங்கபுரம், மேட்டுதெங்கால் செல்லும் சாலையில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளது. அதில் சாலையோரமாக வழிநெடுக இருந்த 15க்கும் மேற்பட்ட பனைமரங்களை கடந்த சிலநாட்களுக்கு முன்பு சிலர் வெட்டி சாய்த்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியனர் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்தொடர்பாக வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும். வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர்இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நரசிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர. வசந்த் சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார்அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரங்களை வெட்டிய ஜான்பால்(44), தினகரன்42) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரைக்கைது செய்தனர்.

புவி வெப்பமயமாதலை அதிக அளவில்தடுத்தல், நிலச்சரிவுகளிலிருந்தும் நிலத்தடிநீரை பாதுகாத்தும் அற்புத மரமாக திகழ்ந்து வரும் பனைமரங்களை விதைத்து வளர்த்து வரும் சமூக ஆர்வலர்கள் மத்தியில், பனைமரங்களை இது போன்ற சமூக விரோதிகள் தங்கள் சுயநலத்திற்காக வெட்டி சாய்த்துள்ளது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. .

Updated On: 7 Nov 2021 4:46 AM GMT

Related News