Begin typing your search above and press return to search.
போலீசாரை கண்டித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
ஓடாத வாகனங்கள் மீது பொய் வழக்கு போடுவதாக போலீசாரை கண்டித்து அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் லாரி ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு, பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ஓடாத வாகங்கள் மீது கூட அடிக்கடி காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.