/* */

குளிக்கச் சென்ற தந்தை மகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவாடானை அருகே நிலமகிழ மங்கலத்தில் குளிக்கச் சென்ற தந்தை மகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.

HIGHLIGHTS

குளிக்கச் சென்ற தந்தை மகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

திருவாடானை தாலுகா நிலமகிழ மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் ஜோதிமணி (39) இவர் கோயம்புத்தூர் பகுதியில் நூற்பாலையில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தேர்தலில் வாக்களிக்க விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஊரணியில் மதியம் குளிக்க சென்றபோது தனது (4) வயது மகள் யாசினியையும் அழைத்துச் சென்றவர். மகளை கரையில் உட்கார வைத்து குளித்தவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராத நிலையில் 4 வயது குழந்தை தந்தையை காணவில்லை எனத் தேடி தானும் குளத்திற்குள் இரங்கி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் நீரில் முழ்கி மூச்சு தினறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரது உடலையும் மீட்டு எஸ்.பி பட்டிணம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக திருவாடனை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 வயதான யாசினிக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை மகள் குளிக்கச் சென்ற இடத்தில் இருவரும் ஊரணி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மனைவியும் ஆண் குழந்தையும் கதறி அழுத காட்சி காண்போரை பதற வைத்தது.

Updated On: 19 April 2021 5:21 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!