இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.
HIGHLIGHTS
இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.பத்த நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது.
இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று உரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ரூபாய் 5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து நேற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் இராமேஸ்வரம் விசைப்படகுகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் விசைப்படகு வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முற்றிலும் வேலையிழந்துள்ளதோடு மீன்பிடி சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது.
இதனால் நாளொன்றுக்கு சுமார் 5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையால் 35 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இதுவரை தாயகம் திரும்பாமல் 51 தமிழக மீனவர்கள் மெரிஹாகனா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்னர்.