Begin typing your search above and press return to search.
இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு
இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட முடிவு.
HIGHLIGHTS
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்.
நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ராமேஸ்வரம் மீனவ சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.