/* */

மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

பாம்பன் குந்தகால் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்கள்

பாம்பன் குந்தகால் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல். மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த குந்துகால் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்வதாக பாம்பன் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் பாம்பன் குற்றப்பிரிவு போலீசார் குந்துகால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குந்தகால் வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது குந்துகால் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து, பாம்பனை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jun 2021 10:43 AM GMT

Related News