Begin typing your search above and press return to search.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
HIGHLIGHTS
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைகண்டித்து துக்க காரியம் செய்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இராமேஸ்வரத்தில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் கோன்களுக்கு மாலை அணிவித்து, பால் ஊற்றி, பத்தி சூடம் ஏற்றி, வாய்க்கரிசி போட்டு துக்க காரியங்கள் நடத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க சொல்லியும் தொடர்ந்து கண்டன முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.