/* */

மண்டபம் வனத்துறையினரின் தொடர் வேட்டையில் 3 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்: 7 பேர் கைது

தொடரும் மண்டபம் வனத்துறையினரின் வேட்டை மூலம் 6 நாள்களில் 3 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

HIGHLIGHTS

மண்டபம் வனத்துறையினரின் தொடர் வேட்டையில்  3 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்:   7 பேர்  கைது
X

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வனத்துறையினரின் தொடர்வேட்டையில் சிக்கிய கடத்தல் பறவைகளிடமிருந்து 6 நாள்களில் 3 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கைக்கு அருகே இராமேஸ்வரம் உள்ளதால் மன்னார் வளைகுடா கடல் வழியாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லி, டால்பின் துடுப்பு உள்ளிட்டவைகள் சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை கடற்கரை நோக்கி வந்த நாட்டுப்படகு ஒன்று வனத்துறையினரை கண்டதும் கரைக்கு வராமல் மீண்டும் கடலுக்குள் சென்றது. இதனை கண்ட வனத்துறையினர் ரோந்து படகில் துரத்தி சென்று முயல் தீவு அருகே வைத்து நாட்டுப்படகை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து படகையும் அதில் இருந்த இருவரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் வனத்துறையினரை கண்டதும் நாட்டுப்படகில் இருந்து 500 கிலோ உயிர் கடல் அட்டைகளை கடலில் போட்டு விட்டதாகவும படகில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் மட்டுமே இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேதாளையை சேர்ந்த மீரான்கனி, முகமது நசீர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மண்டபம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 8 லட்சம் மதிப்பிலான நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களில் மண்டபம் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் 3 ஆயிரம் கிலோ கடத்தல் கடல் அட்டைகள் மற்றும் 3 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 July 2021 2:44 PM GMT

Related News