Begin typing your search above and press return to search.
பிரியங்காவை விடுவிக்கக்கோரி இராமநாதபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
உத்திரப்பிரதேச மாநிலத்தில், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்ததை கண்டித்தும், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரியங்காவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, திருவாடானை தொகுதி எம்எல்ஏ கரு. மாணிக்கம் மற்றும் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.