Begin typing your search above and press return to search.
இராமநாதபுரத்தில் நவ.26ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடைபெறும். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடைபெறும்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை 26ம் தேதி அன்று 11 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்; நடைபெற உள்ளது.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாயசங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.